டி20 உலககோப்பையை கைப்பற்ற இந்த 3 அணிகளுக்குத்தான் வாய்ப்பு – இங்கிலாந்து வீரர் கணிப்பு

worldcup
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஏதர்டன் உலக கோப்பை டி20 தொடரை எந்த அணிகள் வெல்லும் என்ற கருத்துக்கணிப்பை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை டி20 தொடரை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.

Trophy

- Advertisement -

இருந்த போதிலும் இந்திய அணியின் மிக சிறப்பான வகையில் மீண்டெழுந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. அணியில் முக்கிய மூன்று பவுலர்கள் இல்லாதபோதிலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக ஆட முடியும் என்பதை இந்திய அணி நிரூபித்துள்ளது. இந்திய அணிக்கு பலமே ஐபிஎல் லீக் தொடர் தான். ஒவ்வொரு தொடர முடிய முடிய ஒவ்வொரு புதிய வீரர்கள் இந்திய அணிக்காக வந்து கொண்டு இருக்கின்றனர்.

மிகத் திறம் வாய்ந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு மேலும் பலத்தை ஈட்டு தருகின்றனர். சூரியகுமார் யாதவ் , இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காக இருந்தனர். அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வந்தவர் ஆவர்கள்.மேலும் இந்திய அணிக்கு எதிரியை எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற யுக்தி நன்றாக தெரியும்.

thakur

மார்க்கெட் வுட் போன்ற வேகப்பந்து வீச்சாளரின் பந்துகளை இறுதிப்போட்டியில் துவம்சம் செய்தது இந்திய அணியின் பலத்தை காட்டுகிறது.எனவே பலம் வாய்ந்த இந்திய இந்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறயிருப்பதால் மேலும் அது இந்திய அணிக்கு பலத்தை தரும் என்று கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக தெரிகின்றன என்று மைக்கேல் ஏதர்டன் கூறியுள்ளார்.

Advertisement