நல்லவேளை தப்பிச்சிட்டீங்க. இந்திய அணியை மீண்டும் வெறுப்பேற்றிய மைக்கல் வாகன் – ரசிகர்கள் கொதிப்பு

Vaughan
- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் எப்போதும் இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் அவர் கூறிய பல கருத்துக்களால் இந்திய ரசிகர்கள் பலமுறை அவரை விமர்சித்து வசைபாடி உள்ளதை நாம் செய்திகளில் பார்த்துள்ளோம். அப்படி தொடர்ந்து இந்திய அணி குறித்து ஏதாவது ஒரு விஷயத்தை பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

vaughan

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டு தற்போது சிக்கலில் சிக்கி உள்ளார் மைக்கல் வாகன். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று சவுதாம்ப்டன் மைதானத்தில் துவங்க இருந்தது.

ஆனால் நீண்ட நேரமாகியும் மழை நிக்காமல் பெய்து வருவதால் போட்டியின் முதல் நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி ஐந்து நாட்கள் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

Ageas-bowl

இந்த வேளையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ள வாகன் இந்திய அணியை வானிலை நிலவரம் காப்பாற்றியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறிய இந்த கருத்து விளக்கம் யாதெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக எப்படியும் இங்கிலாந்து மண்ணில் நிச்சயம் இந்திய அணி தோற்கும் என்றும் தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறாமல் போனது இதனால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து உள்ளதாக அவர் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட இந்திய ரசிகர்கள் அனைவரும் மைக்கல் வாகனின் இந்த ட்வீட்டிற்கு சமூக வலைதளம் மூலமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் அவரை விமர்சித்து பல கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement