இந்திய அணிக்காக நீங்க 2 பேரும் அறிமுகமானது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு – மெக்ராத் மகிழ்ச்சி

Mcgrath
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணியும், டி20 தொடரை இலங்கை அணியும் கைப்பற்றின. ஷிகார் தவான் தலைமையிலான இந்த புதிய இளம் அணியில் ஏகப்பட்ட வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

அதில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன மெக்ராத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதன்படி இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சேத்தன் சக்காரியா ஒருநாள் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதன் மூலம் டி20 கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

அதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்ற வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்திய அணியில் அறிமுகமானதைத் தொடர்ந்து அவர்களை வாழ்த்தும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மெக்ராத் தனது ட்விட்டர் பக்கத்தில் :

உங்கள் இருவருக்கும் பெரிய வாழ்த்துக்கள். சேத்தன் சக்காரியா மற்றும் சந்தீப் வாரியர் இந்திய அணிக்காக அறிமுகமானதில் மகிழ்ச்சி. அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் மெக்ராத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

sakariya

அவர் இப்படி இவர்கள் இருவரையும் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த காரணம் யாதெனில் சென்னை எம்ஆர்எப் பவுண்டேஷனின் மெக்ராத்தின் ஆலோசனைகளுக்கு கீழ் பயின்ற இவர்கள் இருவரும் தற்போது தேசிய அணிக்கு தேர்வாகும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் அவர்கள் இருவரையும் பாராட்டி மெக்ராத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement