இவரது பந்துவீச்சில் ரன் குவிக்க கடினமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரரை புகழ்ந்த – மாயங்க் அகர்வால்

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் நேற்று துவங்கியது.

toss

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

- Advertisement -

நேற்று ஆட்டம் முடிந்து முதல் நாள் ஆட்டம் குறித்து பேட்டியளித்த மாயங்க் அகர்வால் கூறியதாவது : வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசினார். அவர் பந்துவீசிய பகுதிகள் எங்களுக்கு பேட்டிங் செய்யவும், ரன் குவிக்கவும் சற்று கடினமாக இருந்தது. மேலும் அந்த அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் எங்களை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

agarwal 1

இருப்பினும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நாங்கள் 5 விக்கெட்டுகளை இழந்து ஓரளவு நல்ல ரன்களை குவித்து உள்ளோம். நாளைய போட்டியில் முதல் செசன் மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறோம். விஹாரி மற்றும் பண்ட் சிறப்பாக ஆடி வருகிறார்கள் அவர்கள் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து பெரிய இலக்கை அடையவைப்பார்கள் என நம்புகிறேன் என்று மாயங்க் அகர்வால் கூறினார்.

Advertisement