நீண்ட நாள் காதலியுடன் பஞ்சாப் அதிரடி வீரருக்கு திடீர் திருமணம்..! – யார் தெரியுமா..?

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அனுபவமிக்க வீரர்களை விட, புதிய இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். அதிலும் குறிப்பாக கர்நாடக வீரர்களான கே எல் ராகுல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினர். அவரை போன்றே பஞ்சாப் அணியில் விளையாடிய இளம் கர்நாடக வீரரான மயங்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கபட்டார்.
Mayank

ஆனால் பஞ்சாப் அணியில் விளையாடிய மயங்க் அகர்வால் 11 போட்டிகளில் விளையாடி 120 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். தற்போது ஐ பி எல் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தனது நீண்ட நாள் தோழியான ஆஷிதா ஷூத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

- Advertisement -

இவர்களின் திருமணத்திற்கான அணைத்து யற்பாடுகளும் படு மும்மரமாக நடந்து வருகிறது. தனக்கு திருமணம் நடக்க போகும் உற்சாகத்தை தனது த்விட்டேர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மயங்க் அகர்வால் “இந்த உணச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நாங்கள் இருவரும் என்றும் பல நினைவுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளோம், “என்று தனது சந்தோசத்தை பதிவிட்டுள்ளார்.
agarwal

இந்த இளம் கர்நாடக வீரர் விரைவில் தன்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தை காணுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இவர் இனிவரும் போட்டிகளில் நிலை தன்மையுடன் விளையாடி இவரது திறமையை நிரூபித்தால் மட்டுமே தேர்வாணையத்தின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் இடம்பெற முடியும். அது கண்டிப்பாக எளிதாக இருக்க போவது இல்லை. எதோ எப்படியோ இவரது திருமண வாழ்விற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Advertisement