இவரெல்லாம் ஒரு பீல்டரா ? வயசானவங்க மாதிரி மோசமா பீல்டிங் பண்றாரு – விமர்சனத்திற்கு உள்ளான இந்திய வீரர்

Ashwin-3
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியிலிருந்து முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர்.

pant 2

- Advertisement -

இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா(6) மற்றும் சுப்மன் கில்(29) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்தார்.

இதையடுத்து விராட் கோலி 11, ரஹானே 1, புஜாரா 73,வாசிங்டன் சுந்தர் 85 மற்றும் பண்ட் 91 ரன்களும் குவித்தனர். இதையடுத்து தற்போது இந்திய அணி 337 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் முன்னிலை வைத்திருக்கிறது.

pant 1

இந்நிலையில் இந்திய அணியின் மோசமான பீல்டிங் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் புட்சர் பேசியிருக்கிறார். “இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறந்த பீல்டர் கிடையாது. மற்றவர்களை விட இவரது பீல்டிங் மோசமான நிலையில் இருக்கிறது. தற்போது இருக்கும் வயதை விட 20 வயது அதிகமானவர்கள் போல் எனக்கு தோற்றமளிக்கிறார்.

Ashwin

அதே போல்தான் அவரது பீல்டிங்கும் இருக்கிறது. அஸ்வின் அதிகமான ஓவர்களை வீசுவதால் அவரால் சிறப்பாக பில்டிங் செய்ய முடியவில்லை என்றும் கூறலாம். தனது ஓவரை வெளுத்து வாங்கிய ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்” என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement