10 ஆம் தேதி இறுதி டி20 போட்டி முடிந்ததும், இன்று மனிஷ் பாண்டே என்ன செய்து இருக்கிறார் தெரியுமா ?

Pandey
- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

Pandey-1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் முடிந்து தற்போது சையத் முஷ்டக் அலி கோப்பை டி20 போட்டியில் குரூப் பி பிரிவில் கர்நாடக அணியும், சர்வீஸ் அணியும் ஆந்திர மாநிலம் விஜய நகரம் நடந்த போட்டியில் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களையும் குவித்தனர்.

துவக்க வீரரான படிக்கல் 43 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணிஷ் பாண்டே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளையும் அடித்து அசத்தினார். இதனை அடுத்து சர்வீஸ் அணி தற்போது இமாலய இலக்கை நோக்கி ஆடிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement