நானும் இந்திய அணியின் 4 ஆவது வீரருக்கு பொருத்தமானவன் என்று நிரூபித்த கர்நாடக கேப்டன் – யாருனு பாருங்க

Pandey-1
- Advertisement -

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை நடந்து வருகின்றது. இந்த தொடரில் பல ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பல வீரர்கள் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

pandey

- Advertisement -

குறிப்பாக தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் தற்போது கர்நாடக அணியில் ராகுல் முந்தைய போட்டிகளில் அசத்த தற்போது அந்த அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே நேற்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மேலும் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் விளையாடிய கர்நாடக அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

அதில் துவக்க வீரர் ராகுல் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க கேப்டன் மனிஷ் பாண்டே 118 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரி என மொத்தம் 142 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அபார ஆட்டத்தின் மூலம் கர்நாடக அணி வெற்றியும் பெற்றது ஏற்கனவே ஆலா வீரர்கள் இந்த உள்ளூர் கோப்பையில் அசத்திவர தற்போது பாண்டேவும் தன பங்குக்கு அசத்தியுள்ளார்.

Manish-Pandey

இதன் மூலம் இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் விளையாட தகுதியானவர்தான் என்பதை மணிஷ் பாண்டே நிரூபித்துள்ளார் இதனால் அடுத்து வரும் தொடர்களில் இந்தியனின் நான்காவதாக யாரை தேர்ந்தெடுக்க போகிறோம் என்ற குழப்பம் தேர்வுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement