எங்களின் இந்த மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்தது இதுதான்- மலிங்கா வருத்தம்

Malinga-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பாக பெற அதிகபட்சமாக குஷால் பெரேரா 34 ரன்கள் அடித்தார்.

pant 2

- Advertisement -

அதன்பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்க வீரர் ராகுல் மற்றும் தவானின் சிறப்பான துவக்கத்தால் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது அதன் பிறகு ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது வீரராக ஐயர் களம் இறங்கினார். தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கோலியும் ஐயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இறுதிகட்டத்தில் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது 25 முதல் 30 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இருப்பினும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக லைன் மற்றும் லெந்தில் முறையாக தொடர்ச்சியாக சிறப்பாகவே வீசினோம்.

udana

இசுரு உதானா எங்களது முக்கியமான பந்துவீச்சாளர் இந்த வடிவ கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்தவர். அவர் காயம் அடைந்தது அணிக்கு பின்னடைவாக இருந்தது. இளம் வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் வாய்ப்பளிக்க இருக்கிறோம். உதானா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்று மலிங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement