டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க இவங்க 2 பெரும் இந்திய அணிக்கு தேவை – வி.வி.எஸ் லக்ஷ்மனண் கருத்து

- Advertisement -

இந்தாண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. தற்போதில் இருந்தே ரசிகர்கள் முதல் வல்லுனர்கள் வரை இந்திய அணி எந்தெந்த கிரிக்கெட் வீரர்களை டி20 உலக கோப்பை தொடருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் தனது கருத்தை அண்மையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் ஆகிய இளம்வீரர்களை உலக கோப்பை டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியலில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் நிச்சயமாக உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற வேண்டும். அப்படி இடம் பெற்றால் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் கடந்த சில வருடங்களாகவே மிக சிறப்பாக பங்காற்றி வருகின்றனர். அவர்களது சிறப்பான ஆட்டத்திற்கு பரிசாக இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கப்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் களம் இறங்கினார்.

தனது முதல் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் ஐந்து பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்ளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நான்காவது போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது முதல் இன்னிங்சில் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

sky 1

விவிஎஸ் லட்சுமணன் மட்டும் அல்லாமல் பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் கண்டிப்பாக உலக கோப்பை டி20 தொடரில் ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement