லஷ்மணன் கூறியபடியே தோல்வி அடைந்த இந்தியா – சாதித்த பங்களாதேஷ் அணி

Laxman-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மணன் பங்களாதேஷ் அணி இந்த தொடரில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடும் என்று தெரிவித்திருந்தார்.

ban 1

- Advertisement -

மேலும் இந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்றும் கூறினார். அதேபோன்று பங்களாதேஷ் அணி நிச்சயம் இந்திய அணியை தோற்கடிக்கும் அளவிற்கு பலமாகவே உள்ளது என்றும் லட்சுமணன் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியவரே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் ஆட்டமிழக்க செய்து பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள்.

அதன் பின்னர் களமிறங்கிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அந்த அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் லட்சுமணன் கூறிய கருத்து நேற்றைய போட்டியின் மூலம் உண்மையானது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் அந்த அணி வெற்றிபெறும் என்று லட்சுமணன் கூறியிருந்தார்.

ban 2

அதனைப் போன்றே நேற்று வங்கதேச பந்துவீச்சாளர்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன் மூலமே நேற்றைய போட்டியில் இந்திய அணி எளிய இலக்கினை நிர்ணயித்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement