இந்த இரண்டு வாரம் கனவில் இருப்பதில் போன்று இருந்தேன். இந்திய அணியை காலி செய்த நியூசி வீரர் – விவரம் இதோ

Williamson-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிஷன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் 49 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி அறிமுக தொடரில் அசத்தி தனது சிறப்பான வருகையை கிரிக்கெட் உலகிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது பெற்றபின் அவர் பேசியதாவது : கடந்த இரண்டு வாரம் கனவில் இருப்பது போல் இருந்தது. இந்த அணியுடன் விளையாடியது மிகச் சிறப்பாக உணர்கிறேன். ஆடுகளம் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு உதவியது. ஆனால் சரியான லெந்தை கண்டுபிடித்து எப்போது வீச வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

Jamieson

எனது பேட்டிங்கில் நான் பயிற்சி செய்து வருகிறேன். அதனை மெருகேற்றி வருகிறேன் . இறுதி கட்டத்தில் எப்படி ஆடுவது என்பது குறித்து யோசித்து வருகிறேன் இவ்வாறு கூறினார் கைல் ஜெமிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement