நம்பி டீம்ல எடுத்ததுக்கு நல்ல வேல பண்ணிருக்கீங்க. அவங்க ஜெயிச்சதுக்கு இவர்தான் காரணம் – ரசிகர்கள் கொதிப்பு

Ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஐயர் மற்றும் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 347 ரன்கள் குவித்தும் அதனை நியூசிலாந்து அணி அபாரமாக சேஸிங் செய்து 48.1 ஓவர்களில் 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Taylor-3

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முக்கிய வெற்றிக்கு முக்கிய காரணமாக நியூசிலாந்து அணியின் ராஸ் டைலர் ஆட்டமிழக்காமல் சதமடித்து காரணமாக திகழ்ந்தார். தொடக்கத்தில் அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை குல்தீப் யாதவ் தவறிவிட்டார். இதேபோல மற்றொரு கேட்ச்சை ராகுல் தவறிவிட்டார் இந்த இரண்டு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட டைலர் ருத்ர தாண்டவம் ஆடி சதம் அடித்து அவர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கேட்ச் தான் விட்டார் என்றால் பந்து வீச்சிலும் மிக மோசமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 84 ரன்களை விட்டுக்கொடுத்து சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 3 ஆவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை புரிந்தார். இதனால் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு அவரே காரணம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Kuldeep

மேலும் பீல்டிங் மட்டுமின்றி 24 வைடுகள் உட்பட 29 ரன்களை இந்திய அணி எக்ஸ்ட்ராவாக விட்டுக் கொடுத்ததும், பீல்டிங்கில் மோசமான செயல்பாடுமே இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பல போட்டிகளாகவே இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பி வருகிறது.

Advertisement