விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளரிடம் தோனி குறித்த கேள்விக்கு பதில் அளித்த குல்தீப் யாதவ் கூறியதாவது : தோனி எனக்கு அளித்த டிப்ஸ்களில் நிறைய முறை அது தப்பாக சென்றிருக்கிறது சில முறை அவர் கூறுவது போல நடந்தாலும் பல முறை தவறாக நடக்கும். ஆனால், அது குறித்து தோனியிடம் இது சென்று கேட்க முடியாது. மேலும், தோனி யாரிடமும் அதிகம் பேசமாட்டார் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவார் அதேபோன்று ஓவர்களுக்கு மத்தியில் தான் பந்துவீச்சாளர்களுக்கு டிப்சை தருவார்.
மேலும் அவர் விரும்பினால் மட்டுமே அதே போன்று நடந்து கொள்வார் மற்ற நேரங்களில் அவர் பொறுமையாக இருப்பார் என்றும் குல்தீப் யாதவ் கூறினார். உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் இந்த சமயத்தில் தோனி குறித்து அதே அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் கூறியுள்ள இந்த கருத்து தற்போது சசர்ச்சையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சர்ச்சை பேட்டி குறித்து முதன் முறையாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் குல்தீப் யாதவ். அந்த பதிவில் தோனி மீது எனக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை உள்ளது. நான் அவரைப்பற்றி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய் யாரோ சமூகவலைத்தளத்தில் என் பெயரை வைத்து இதுபோன்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
மேலும் அதனை சிலர் ஷேர் செய்து அதிக அளவில் பரவ காரணமாகவும் இருக்கின்றனர். இந்த தகவல் முற்றிலும் தவறு தோனி மிகச் சிறந்த வீரர் அவரைப் பற்றி நான் ஒருபோதும் தவறாக பேசியதில்லை மேலும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல பிணைப்பு உள்ளது என்று உறுதிபட கூறினார். இந்த பதிவின் மூலம் தோனி குறித்து குல்தீப் யாதவ் கூறியதாக வெளியாக தகவல் முற்றியும் போலி என்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.