சிறப்பான ஆல்ரவுண்டராக இருந்தும் பறிபோன க்ருனால் பாண்டியாவின் டி20 இடம் – காரணம் இவர்தான்

Krunal
- Advertisement -

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

krunal 2

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் T20 இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இளம் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக இடதுகை சைனாமேன் பவுலரான குல்தீப் யதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்வு எந்த அளவிற்கு எடுபடும் என்று தெரியவில்லை. ஏனெனில் க்ருனால் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுவதால் அவர் தொடர்ந்து டீ20 அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் திடீரென நீக்கப்பட்டு உள்ளதால் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement