டி20 போட்டிகளில் முடிவுக்கு வந்த குலதீப் மற்றும் சாஹல் ஜோடி. இனி அவர்கள் ஆடுவது கஷ்டம் தான் – காரணம் இவர்களா ?

Chahal
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

chahal

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடருக்கான டி20 அணியில் வழக்கம்போல் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் இடம் பெறமாட்டார்கள் என்று தெரிகிறது. இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.

ஆனால் டி20 போட்டிகளில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்து எப்போதும் விளையாட வைக்கிறது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரிலும் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Krunal

மேலும் இதன்மூலம் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரின் டி20 வாய்ப்பு முடிந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்து நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரிலும் இவர்கள் இடம் பிடிப்பது கேள்விக்குறிதான். எது எப்படியோ அணி பலமாக இருந்தால் அதுவே நமக்கு போதும்.

Advertisement