பண்டை காலி செய்ய புதிதாக உருவாகியுள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர் அசத்தல் – விவரம் இதோ

KS-bharath
- Advertisement -

தோனிக்கு பதிலாக இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார். துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டிலும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

pant

- Advertisement -

நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மங்கி வருவதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பரிசோதித்து பார்க்கலாம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக தற்போது நடைபெற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் அதே சமயத்தில் இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரீகர் பரத் 57 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் அந்த 71 ரன்களில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை அவர் அடித்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியை கொடுத்து வரும் பரத் தற்போது இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உள்ளதால் அவர் மீது இந்திய அணி தேர்வுக்குழுவின் ஒரு கண் விழுந்துள்ளது.

Bharath

இதனால் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது என்று கருதப்படுகிறது. இருப்பினும் இவருக்கு முன்னதாக சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement