டாம் கரனுடன் சண்டைக்கு வார்த்தை போரில் ஈடுபட்ட க்ருனால் பாண்டியா – வைரலாகும் வீடியோ

Tom-Curran
- Advertisement -

இந்திய அணிக்காக நேற்றைய போட்டியில் அறிமுகமான க்ருனால் பாண்டியா தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை சிறப்பாக துவங்கியுள்ளார். புனே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. இந்த ரன் குறிப்பிற்கு முக்கிய காரணமாக இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய க்ருனால் பாண்டியா திகழ்ந்தார் என்றால் அது மிகை அல்ல.

Krunal 2

- Advertisement -

ஏனெனில் 26 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் அறிமுகமான ஒருநாள் போட்டியிலேயே அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தது. மட்டுமின்றி 31 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் என 58 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் பந்து வீச்சிலும் முழுமையாக 10 ஓவர்கள் வீசி அவர் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

41 வது ஓவரில் 205 ரன்கள் இருந்த நிலையில் மீதமுள்ள 9 ஓவர்களில் க்ருனால் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து 112 ரன்களை சேர்த்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த போட்டியின் போது க்ருனால் பாண்டியா டாம் கரனுடன் வார்த்தை போரில் ஈடுபட்ட செயல் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

அதன்படி 49வது ஓவரை வீசிய டாம் கரண் பந்து வீச்சில் சிங்கில் ஒன்றை அடித்த க்ருனால் பாண்டியா டாம் கரணை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தவாறு நடந்து வந்தார். அதேபோன்று டாம் கரனும் அவரை நோக்கி ஏதோ பேசினார். இடையில் ஜாஸ் பட்லரும் இணைந்து கொண்டு க்ருனால் பாண்டியவை நோக்கி ஏதோ பேசிக் கொண்டு வர இந்த விவகாரம் சூடு பிடித்தது.

Tom1

பின்னர் அம்பயர்கள் வீரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். முதல் போட்டியிலேயே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள க்ருனால் பாண்டியாவிற்கு அனைவரும் சமூக வலைதளம் மூலம் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement