இவர் மட்டும் கரெக்ட்டா பிடிச்சிருந்தா இந்தியா நேத்து தோத்து இருக்காது – ரசிகர்கள் கடுப்பு

- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

Ban 3

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களும், பண்ட் 27 ரன்கள் குவித்தனர். மேலும் இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதல் டி20 போட்டி வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக க்ருனால் பாண்டியா பார்க்கப்படுகிறார்.

ban 2

ஏனெனில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற முஷ்பிகுர் ரஹிம் கொடுத்த கைக்கு எளிதான கேட்ச் பாண்டிய போட்டியின் முக்கியமான கட்டத்தில் அந்த கேட்சை க்ருனால் பாண்டியா தவறவிட்டார். அதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹீம் கலீல் வீசிய ஒரே ஊரில் 4 பவுண்டரி அடித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். எனவே க்ருனால் பாண்டியா விட்ட அந்த கேட்ச்சில் தான் ஆட்டமே திரும்பியது என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement