இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு புதுமுக வீரர்களுக்கு அறிமுக வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒருவர் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியாவின் அண்ணனான க்ருனால் பாண்டியா. உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் விளையாட தேர்வாகி இருந்தார்.
ஏற்கனவே அவர் இந்திய அணியின் டி20 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாவது இதுதான் முதல்முறை. மேலும் இந்த ஒருநாள் தொடரின் போட்டியிலேயே அவர் இந்திய அணிக்காக இன்று அறிமுகமாகிறார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகும் போட்டியில் தனது அறிமுக தொப்பியை தனது தம்பி ஹர்டிக் பாண்டியாவிடம் இருந்து பெற்ற க்ருனால் பாண்டியா கண்கலங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் அதோடு தனது அறிமுக தொப்பியை பெற்ற க்ருனால் வானத்தை நோக்கி உயர்த்தி காண்பித்த அவர் சமீபத்தில் மறைந்த தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே க்ருனால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தனது தந்தையின் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர் என்பதை சமூக வலைதளம் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
ODI debut for @krunalpandya24 👌
International debut for @prasidh43 👍#TeamIndia @Paytm #INDvENG pic.twitter.com/Hm9abtwW0g— BCCI (@BCCI) March 23, 2021
அந்த வகையில் தற்போது சமீபத்தில் மரணமடைந்த தனது தந்தையின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தான் ஒரு நாள் போட்டிக்கான தொப்பியை வாங்கியதும் அதை வானை நோக்கி காண்பித்து தனது தம்பி ஹர்டிக் பாண்டியா உடன் கண்கலங்கியபடி அதனை சமர்ப்பித்தார். அவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் முடித்த பின்னர் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்துள்ளது. தனது அறிமுக போட்டியில் விளையாடியுள்ள க்ருனால் பாண்டியா 31 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரி என ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.