க்ருனால் பாண்டியாவால் இந்திய அணிக்கு ஏற்பட்ட பாதிப்பு – இந்த 8 பேரும் விளையாட முடியாதாம்

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போட்டி ஜூலை 28 ஆம் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும் க்ருனால் பாண்டியா இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு 7 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

Krunal-1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அணியின் மருத்துவக்குழு க்ருனால் பாண்டியாவுடன் நெருக்கமாக இருந்த எட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக ரிசல்ட் அறிக்கையை வெளியிட்டு இருந்தாலும் அவருடன் நெருக்கமாக இருந்த அந்த எட்டு வீரர்களையும் தனிமைப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எஞ்சியுள்ள தொடரில் அந்த 8 வீரர்கள் பங்கேற்க முடியாது எனவே இந்திய அணிக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறும் நிலையில் நாளை 29ஆம் தேதி 3வது போட்டி நடைபெறுகிறது. இதற்கான அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த எட்டு வீரருக்கு பதிலாக இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் தான் சமாளித்து விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

IND

20 பேர் கொண்ட இந்திய அணியில் க்ருனால் பாண்டியாவோடு சேர்த்து ஒன்பது பேர் தற்போது இந்த போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலையில் எஞ்சியுள்ள 11 வீரர்களை வைத்து இந்திய அணி விளையாடும் என்று தெரிகிறது. ஆனால் க்ருனால் பாண்டியாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அந்த வீட்டு வீரர்கள் யார் ? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது அனைத்துமே இன்றைய போட்டியின் துவக்கத்தில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி இந்த டி20 தொடரையும் எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement