க்ருனால் பாண்டியா மட்டுமல்ல மேலும் 8 பேரை தனிமைப்படுத்திய அணி நிர்வாகம் – விவரம் இதோ

Krunal-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த 2வது டி20 போட்டியானது இந்திய அணியின் ஆல்ரவுண்டரானா க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நாளை ஜூலை 28-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

IND

- Advertisement -

அந்த பரிசோதனையின் முடிவில் வீரர்கள் அனைவர்க்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலே நாளைய போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இந்த 2-வது போட்டியும் கைப்பற்றி தொடரை வெல்ல ஆர்வமாக காத்து இருந்தது.

இவ்வேளையில் க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக தற்போது போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் க்ருனால் பாண்டியா மட்டுமல்லாது அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 8 வீரர்கள் அணி நிர்வாகித்தினால் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

krunal

மேலும் நாளைய போட்டிக்கு முன்பாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறும் என்றும் அந்தப் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே நாளைய போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின்போது திடீரென வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகவே அந்த போட்டி அன்று ரத்து செய்யப்பட்டு மறுநாள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement