இந்த வருடம் இந்த நாட்களில் கோலி தான் அடுத்த சச்சின் டெண்டுல்கர்.! ஆருடம் கூறிய ஜோசியர்..!

viratastrology
- Advertisement -

இந்திய அணியின் புதிய கேப்டனாக இருந்து வரும் கோலி கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். அதே போல சச்சின் சாதனைகளையும் கோலி கண்டிப்பாக முறியடிக்கும் சாத்தியங்களும் பல உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது கோலி தான் சச்சின் சாதனைகளை முறியடிப்பார் என்று ஜோதிடர் ஒருவர் ஆருடம் கூறியுள்ளார்.

virat

அறிவியல் வளர்ந்து விட்ட இந்த நவீன உலகத்தில் ஜோசியம், ஜாதம் போன்றவைகளை எல்லாம் இன்னும் கூட மக்கள் நம்பி வருகிண்றனர். ஏற்கனவே உலக கால்பந்து கோப்பை போட்டிகளில் கூட ஆமை,ஓணான்போன்ற பிராணிகளின் ஜோசியம் மிகவும் பிரபலமானது. தற்போது கோலி பற்றிய ஒரு சில கணிப்புகளை நாக்பூரை சேர்ந்த பிரபல ஜோதிடர் நரேந்திர புண்டே கூறியுள்ளர்.

- Advertisement -

சமீபத்தில் இதுபற்றி அவர் தெரிவிக்கையில் ‘என்னுடைய கடந்த கால கணிப்புகள் எல்லாம் சரியாக தான் இருந்தது. அதே போல கோலி 2025 குள் நடக்கவிருக்கும் டி20 மற்றும் உலக கோப்பைகளை கோலி தான் வெல்வார் என்பதை என்னால் காண முடிகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் கோலி , சச்சினின் சாதனைகளை முறியடிப்பார்.’ என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில்

viratkolhi

‘கோலியின் ஜாதகம் மிகவும் அற்புதமாக உள்ளது, அதனால் தான் கோலி வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்பதை நான் உறுதியாக சொல்லுகிறேன்’ என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார். அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியில் கங்குலி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்ற கணித்திருந்ததும் சரியாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement