மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நான் நிச்சயம் விளையாடுவேன் – விராட் கோலி தயார்

Kohli
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருவதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க முடிவு செய்தது. ஆனால் தற்போது கோலி வேறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முழு தொடரிலும் பங்கேற்க உள்ளார் என்று தெரிகிறது. ஏனெனில் உலகக்கோப்பை முடிந்து அணிக்குள் கேப்டன் பிளவு மற்றும் பல்வேறு வகையான மாற்றங்கள் வர உள்ளதால் அவற்றை சரியான முறையில் கணித்து அணியை தயார் செய்ய கோலி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Kohli

அதற்காக இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தனக்கு ஓய்வு வேண்டாம் என்றும் தொடர்ந்து விளையாட போவதாகவும் பி.சி.சி.ஐ யிடம் அவர் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement