வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் கோலி விளையாடமாட்டார் – வெளியான புது தகவல்

Kohli-1
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Kohli-3

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் ஓய்வின்றி விளையாடி வருகிறது. இதனால் அணி நிர்வாகம் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கோலி தலைமையிலான இந்திய அணியில் கேப்டன் கோலி உட்பட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.

அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை விளையாட வைக்கும் திட்டமும் உள்ளதாம். இதனால் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி வெளியான அறிக்கையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய தொடர், ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து போட்டிகள் வர இருப்பதால் பணிச்சுமையை குறைக்க கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

Kohli-1

மேலும் அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதனை வைத்து டி20 உலகக்கோப்பைக்கான அணியை தயார்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அடுத்த தொடரில் பல இளம் வீரர்களை அணியில் புதிதாக எதிர்பார்க்கலாம்.

Advertisement