இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தேனீர் இடைவேளையின்போது நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் 115 ரன்களுடனும் அகர்வால் 84 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 317 ரன்களை குவித்து அசத்தினார்கள். ரோஹித் 176 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இரட்டை சதம் அடிக்கும் அற்புதமான வாய்ப்பை ரோஹித் நழுவவிட்டார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அகவல் இரட்டைசதமடித்து 215 ரன்களில் வெளியேறினார். ரோஹித் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி வரும்போது கோஹ்லி அவர் வரும் வரை கதவின் அருகில் நின்று கைதட்டியவாறு சிறப்பாக வரவேற்றார். கோலியின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.