அஷ்வினிடம் கோரிக்கை வைத்த கோலி. கச்சிதமாக செய்து முடித்த சூழல் மன்னன் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்கள் குவிக்க அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 249 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடியது இந்திய அணி.

Southee

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சின் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி இறுதியில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக தற்போது 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இரண்டாவது இன்னிங்சை முடிக்கவே நியூசிலாந்து அணிக்கு தற்போது போட்டி சாதகமாக உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 40 ஓவர்கள் போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு தற்போது அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.

Southee-2

இந்நிலையில் இந்த போட்டியின்போது இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி ஸ்லிப்பில் நின்றுகொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் டீ பிரேக்கிற்குள் 2 விக்கெட்டுகள் உன்னிடமிருந்து வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். மேலும் இதனை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கேட்கும் அளவிற்கு அவர் சத்தமாக கூறிவந்தார்.

ashwin 2

அதன்படியே தற்போது நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த இரண்டு விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement