அசாருதீன், கங்குலி மற்றும் தோனி ஆகியோரது சாதனையை அசால்ட்டா தூக்கி சாப்பிட்ட கோலி – சாதனை விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

Umesh 3

- Advertisement -

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி இன்று காலையும் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. இன்று தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஹம்சா 62 ரன்களை குவித்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 335 ரன்கள் தென்னாப்பிரிக்க அணி பின்தங்கியதால் இந்திய அணியின் கேப்டன் கோலி பாலோ ஆன் கொடுத்தார். அதன்படி இரண்டாவது இன்னிங்க்ஸை தற்போது ஆடிவரும் அந்த அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த போட்டியில் கோலி பாலோ ஆன் கொடுத்தது மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

Kohli

அதன்படி இந்திய அணியின் கேப்டனாக அதிகமுறை எதிரணிக்கு பாலோ ஆன் கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி இன்று படைத்தார். இதுவரை 8 முறை அவர் எதிரணிக்கு பாலோ ஆன் கொடுத்துள்ளார் .இதற்கு முன்னதாக அசாருதீன் 7 முறையும், கங்குலி 5 முறையும் மற்றும் தோனி 4 முறையும் எதிரணிகளுக்கு பாலோ ஆன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement