தெ.ஆ தொடர் முடிந்ததும் சுற்றுலா கிளம்பிய விராட் கோலி மற்றும் அனுஷ்கா – புகைப்படம் இதோ

anushka
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராக உள்ளது. இந்த தொடரின் டி20 போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி தனது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்று விலகியுள்ளார்.

View this post on Instagram

????❤️ @anushkasharma

A post shared by Virat Kohli (@virat.kohli) on

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டியில் அணியுடன் இணைவார் என்றும் மேலும் இந்த ஓய்வு அவரின் விருப்பத்தின் பெயரில் வழங்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது ஓய்வு நாளை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி கழித்து வருகிறார். மேலும் எப்போது ஓய்வு இருந்தாலும் இந்த ஜோடி ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதனை தங்களது சமூகவலைதளத்தில் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். கோலி தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை ஆனால் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement