Worldcup : ஆமாம் இவர் அணிக்கு மிகவும் தேவை அதனாலே உ.கோ அணியில் தேர்வுசெய்யப்பட்டார் – கோலி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Vijay-Shankar
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்த அணித்தேர்வில் அம்பதி ராயுடுவிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வானார். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

Vijay Shankar

இந்திய அணியில் விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து அதிகம் பேசிவருகின்றனர். இந்திய அணியில் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டு அவர்களின் செயல்பாடு கவனிக்கப்பட்டது. அதில் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பினை வழங்கினோம். அதில் விஜய் ஷங்கரின் செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது. அவரால் பேட்டிங் செய்ய முடிகிறது. மேலும் அவ்வப்போது பந்துவீசவும் உதவுவார். அதுமட்டுமின்றி பீல்டிங் சிறப்பாக செய்கிறார்.

அனைத்து அணிகளும் சரியான கலவையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும்போது நம் அணியில் ஏன் கலவையான வீரர்கள் இருக்கக்கூடாது என்று இந்த முடிவினை எடுத்தோம். அதனால் விஜய் ஷங்கரை அணியில் தேர்வு செய்தோம். அவரின் திறமை மீது எங்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம் என்று கோலி தெரிவித்தார்.

Advertisement