Virat Kohli : உலகக்கோப்பை தொடர் கடினமாக இருந்தாலும் அதை வென்று இவர்களுக்கு அர்பணிப்பேன் – கோலி பேட்டி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

dhoni kohli
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்திய அணி இங்கிலாந்தில் சவாலான தொடரை எதிர்கொள்ள உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க ஆட்டங்கள் ஆகவே பெரும்பாலும் அமையும் இருந்தாலும் தற்போது உள்ள இந்திய அணி அதற்குத் சிறப்பாக தயாராகியுள்ளது.

Virat-Kohli

எனவே சவால் நிறைந்த தொடராக இருந்தாலும் நமது அணி சிறப்பாக ஆடும் மேலும் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நமது அணி சிறப்பாக செயல்படும் மேலும் இந்த தொடரை இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்றி உலகக் கோப்பையை இந்திய நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக கோலி கூறினார்.

Advertisement