பேட்டிங்கில் இவர்..பவுலிங்கில் இவர்..இவர்களே வெற்றிக்கு காரணம் – கேப்டன் கோலி பேட்டி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்களை குவித்தது.

INDvsENG

- Advertisement -

அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இது ஒரு ப்ராப்பர் போட்டியாக அமைந்தது. இந்த பார்மெட்டில் டாப் அணியாக விளங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த வெற்றி சிறப்பானது. இந்த மைதானத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும் பொழுது முதலில் 180 ரன்களுக்கு மேல் அடிக்க நினைத்தோம். அதன்படி ரன்களை குவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

sky 2

குறிப்பாக சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யுள்ளார். முன்பு இஷான் கிஷன் செய்ததை இன்று சூர்யகுமார் யாதவ் செய்துள்ளார். அவர்கள் இருவருமே ஐபிஎல் போட்டிகளை போன்றே பயமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகின்றனர். எங்களிடம் போதுமான டி20 போட்டிகள் தற்போது இல்லை அதனால் இவர்களுக்கு தற்போதைய வாய்ப்பு கொடுத்து அவர்களுக்குத் தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.

thakur 1

மேலும் பவுலிங்கில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுத்து சரியான நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரை கோலி பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது

Advertisement