இவங்க 2 பேர் இல்லாமலே நாங்க ஜெயிச்சது ஹேப்பி. அவங்களும் வந்துட்டா டீம் வேற லெவல் தான் – கோலி பெருமிதம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலையில் இருந்தது, இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் காயம் காரணமாக விளையாடாததால் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடினார். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

Nattu

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரரான மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர மற்ற அனைவரும் ரன்களை சற்று அதிகமாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 52 ரன்களையும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். மேலும் ஆட்டமிழக்காமல் அணியை கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து பாண்டியா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

pandya

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : டி20 போட்டிகளில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். இந்த போட்டியில் மிகப்பெரிய இரண்டு வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெற்றிருப்பது சிறப்பான உணர்வைத் தருகிறது. அனைவரும் தற்போது ஐபிஎல்லில் 14 போட்டிகளில் விளையாடி விட்டு வந்து இருக்கிறோம். அதனால் எங்களுடைய திட்டங்கள் சரியாக இருக்கின்றன.

nattu

நடராஜன் மீண்டும் இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாகூரும் சிறப்பாக வீசினார். ஹர்திக் பாண்டியா இந்த போட்டியை சிறப்பாக முடித்து கொடுத்தார். ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கம் அமைத்தார். இது ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக எங்களுக்கு கிடைத்த வெற்றி அடுத்த போட்டியும் = சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய அணியில் தற்போது நல்ல சூழல் இருந்து வருவதாக கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement