விரைவில் இவர் இந்திய அணியில் பெரிய வீரராக டி20 போட்டியில் சாதிப்பார் – கோலி நம்பிக்கை

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டி நேற்று இரவு ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். அதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.அப்போது மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது மழை தொடர்ந்து நிற்காமல் இருந்ததால் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது : இன்றும் முழுமையான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். புதிய பந்தில் நன்றாக விளையாடினோம்.

Sundar

ஜடேஜா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நாங்கள் 160 ரன்கள் கடந்தோம். அதேபோன்று சுந்தர் சிறப்பாக பந்து வீசுகிறார் அவர் அவருடைய பணியை சிறப்பாக செய்கிறார். விரைவில் அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்று விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement