கடைசி பந்தினை வீசுவதற்கு முன் ஷமியிடம் நான் இதைத்தான் கூறினேன். வெற்றியும் கிடைத்தது – கோலி பாராட்டு

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.

Southee

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்து அபாரமாக போராடினார்.

இந்த போட்டியில் நியூசி வீரர் குப்தில் 31 ரன்கள், முன்ரோ 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் தனி ஆளாக நின்று 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 95 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்று வந்து கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.அதனைத் தொடர்ந்து ஷமி வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரோஸ் டைலர் போல்டாகி ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பான இப்போட்டி டையில் முடிந்தது.

Williamson

பிறகு சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

Rohith-2

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஷமியின் இறுதி ஓவர் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்த போட்டியில் முக்கியமான தருணத்தில் ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார். அவருடைய அனுபவத்தை அந்த பந்துகளின் மூலம் இந்த போட்டியில் அவர் காண்பித்தார்.

Shami 1

அதிலும் குறிப்பாக கடைசி பந்து வீசுவதற்கு முன் நாங்கள் சிறிய ஆலோசனையில் ஈடுபட்டு அதில் நான் ஷமியிடம் இந்த பந்தினை ஸ்டம்பிற்கு வீசி விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே நாம் வெற்றி பெற வேண்டும் இல்லையென்றால் சிங்கிள் கிடைத்து அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறினேன். உடனே ஷமி பந்தை ஸ்டம்புக்கு வீசினார். போட்டி எங்கள் பக்கம் திரும்பியது அதன்பிறகு சூப்பர் ஓவரில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement