இந்த தொடரில் 3 போட்டிகளிலும் நாங்கள் தோற்க இது மட்டும் தான் காரணம் – கோலி வேதனை

Kohli-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்து அட்டகாசமான வெற்றியை பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை வாஷ் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வீரர்களான நிக்கோலஸ், கிராண்ட் ஹோம் மற்றும் குப்தில் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது :
இது மிகப்பெரிய தோல்வி அல்ல. ரன்கள் காட்டும் அளவிற்கான அவ்வளவு பெரிய தோல்வியாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் பந்து வீச்சிலும் பீல்டிங்கில் சொதப்பி விட்டோம். இந்த தொடரில் நாங்கள் வெல்வதற்கான தகுதி எங்களிடம் இல்லை . மிகவும் மோசமாக விளையாடினோம், வரும் வாய்ப்புகளைத் தவற விட்டோம் .

IND-2

நியூசிலாந்து அணி எங்களை விட மிகவும் நுணுக்கமாக ஆடினார்கள் . மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற அவர்களுக்கு தகுதி இருக்கிறது. தற்போது டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறோம். அணி நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சரியான மனநிலையில் சென்றால் டெஸ்ட் தொடரிலும் வெல்லலாம் இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Advertisement