மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இந்த இளம் வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் – கோலி நம்பிக்கை

Kohli-1
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி இன்று கயானா நகரில் நடக்க உள்ளது.

Saini-1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் பந்துவீச்சாளரான சைனி குறித்து அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சைனி குறித்து கோலி கூறியதாவது : சைனி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

சைனி தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுகிறார். அவரின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது மேலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்கு சிறப்பாக பந்துவீசுவார் என்று நான் நம்புகிறேன். இனிவரும் போட்டிகளில் அவரின் திறமைகளை வெளிக்கொண்டுவர தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று கோலி கூறினார்.

Saini

இந்திய ஏ அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் சைனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் அறிமுகமாகி 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement