இந்திய கிரிக்கெட் அணி குறித்து இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ரோகித் கோலி இடையேயான மோதல் தான். இந்த மோதலை தீர்த்து வைக்க பி.சி.சி.ஐ அதிகாரி அமெரிக்கா சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தனது மனைவியை எந்த ஒரு அறிவிப்பும் இன்றி விதிமுறைகளை மீறி 7 வாரமும் தன்னோடு உலக கோப்பை தொடர் முழுவதும் ரோஹித் தங்க வைத்தார். இந்த விவகாரம் பெரிதாக கோலி மற்றும் ரோஹித்துக்கு இடையே பணி போர் ஆரம்பித்தது. அதன் பிறகு கேப்டன்சி பிரச்சினையாலும் இருவருக்குள் பெரிய பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கருத்து மோதல் குறித்து முதல்முறையாக விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் கோலி கூறியதாவது : இந்த மோதல் உண்மை எனில் நாங்கள் விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்டு இருக்க முடியாது. எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் என் முகத்தில் அல்லது என்னுடைய நடவடிக்கைகள் நீங்கள் அதனை தெளிவாக காணமுடியும்.
நான் ரோகித் பற்றி எப்போதுமே புகுந்து மட்டுமே பேசி வந்துள்ளேன். அவருக்கு அந்த தகுதி உள்ளது என்று நான் நம்புகிறேன் எங்களுக்குள் எந்த கருத்து மோதலும் இல்லை. இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கோலி கூறினார்.