முதல் போட்டியில் ஜெயித்தால் சும்மா இருக்க முடியாது – கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டி முடிந்தபின் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்று பேசிய கோலி மேலும் முதல் இன்னிங்சில் பெரிய ரன்கள் அடித்தால் பந்து வீச ஏதுவான சூழ்நிலை அமைவதாகவும் கூறினார்.

மேலும் இந்த போட்டியில் அதிக நேரம் இருந்ததால் மாயங்க் அகர்வால் நிறைய ரன்கள் அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் முச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதே போல இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டோம் அதனால் எளிதாக இருந்துவிட முடியாது. அடுத்த போட்டியில் பிங்க் பாலில் டெஸ்ட் நடைபெற உள்ளது.

ricket-ball

பிங்க் நிற பந்தில் கூடுதல் வேகமாகவும், பந்து முன்கூட்டியே பேட்டுக்கு வரும் எனவே அந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளோம். மேலும் இந்த போட்டி இந்திய அணியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் எனவே மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு போட்டியாக அந்த போட்டி உள்ளது ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் கோலி கூறினார்.

Advertisement