ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – கோலி வேதனை

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

smith 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியினர் எங்களை விட அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி விட்டார்கள். நாங்கள் பந்துவீச்சில் திறம்பட செயல்பட தவறிவிட்டோம். எங்களது பந்து வீச்சில் சுத்தமாக தாக்கம் இல்லை. ஆஸ்திரேலிய அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணி.

Kohli

இந்த மைதானத்தின் கண்டிஷன் மற்றும் அளவுகளை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். 1-2 விக்கெட்டுகளை அவர்கள் தவறுதலாக இழந்தாலும் தொடர்ச்சியாக அடித்து விளையாடுகின்றனர். பீல்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலிய அணி முற்றிலும் எங்களை வீழ்த்தி விட்டது என்றே கூறவேண்டும் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement