ஐயர் இந்திய அணிக்காக ஆடும் விதம் எனக்கு இதனை நியாபகப்படுத்துகிறது – கோலி புகழாரம்

Iyer-2
- Advertisement -

இந்திய அணி உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியதில் இருந்து இந்திய அணியின் நான்காவது வீரர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நடந்து வந்தது. அதன் பிறகு தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது.

- Advertisement -

மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை சரிவர இல்லாத நிலையில் தற்போது இந்த தொடரில் 4ஆவதாக பண்டும், 5 ஆவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயரும் களம் இறக்கப்பட்டு வருகின்றனர். இதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து பண்ட் தவற விட்டு வருகிறார். ஆனால் 5 ஆவது இடத்தில் இறங்கும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடி 2 அரை சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.

ஐயர் நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதனை அடுத்து போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி கூறியதாவது : ஷ்ரேயாஸ் ஐயர் கடினமான சூழ்நிலையை கணித்து சிறப்பாக ஆடினார். மேலும் நேற்றைய போட்டியில் அவர் என் மீது இருக்கும் அழுத்தத்தை குறைத்து என்னுடைய ஆட்டத்தை எளிமையாக்கினார். அவர் இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு நல்லதாக அமையும்.

மேலும் நான் இந்திய அணிக்குள் நுழையும்போது என்னுடைய அணி வெற்றி வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக முயற்சி செய்து விளையாடுவேன். அது போன்று தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் தனது நலனுக்காக விளையாடாமல் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று மட்டும் நினைத்து விளையாடுவதாக கோலி அவரை புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement