யாரும் இவங்கள பத்தி பேசாதீங்க ப்ளீஸ். நான் சப்போர்ட் பண்ணமாட்டேன் – கோலி வெளிப்படை

Kohli-3
- Advertisement -

இந்திய அணிக்கு கடந்த சில வருடங்களாகவே ரோஹித் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்து வருகின்றனர். கிட்டத்தட்ட சச்சின் கங்குலி எவ்வாறு ஒரு லெப்ட் அண்ட் ரைட் காம்பினேஷனாக இருந்ததோ அதனைப் போன்றே இவர்கள் இருவரும் தொடர்ச்சியான சிறப்பான துவக்கத்தை அளித்து வந்தனர்.

Dhawan

- Advertisement -

ஆனால் கடந்த சில தொடர்களாகவே தவான் காயம் காரணமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது டி20 போட்டிகளில் தவானின் ஸ்ட்ரைக்ரேட் குறைவாகி வருகிறது. ஆனால் ராகுல் துவக்க வீரராக மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார்.

இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த தவான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அணிக்கு மீண்டும் திரும்ப ரோகித் ஓய்வு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். இதனால் மீண்டும் ராகுல் தவானுடன் சிறப்பான துவக்கத்தை அளித்து வருகிறார். இந்த தொடரிலும் ராகுலின் சிறப்பான ஆட்டம் தொடர உலகக் கோப்பையில் இந்த மூவரில் யார் சரியான துவக்க ஜோடியாக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Rahul

அதுகுறித்து தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலியும் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அவர் தான் சிறந்தவர், இவர் தான் நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் தொடக்க ஆட்டக்காரர்களை ஒப்பிட்டு பேசுவதை ரசிகர்களும், விமர்சனவாதிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை மூவரும் சிறப்பாக ஆடுகிறார்கள் அது அணிக்கு பலம் தான்.

Rahul-1

மற்றபடி அணியில் உள்ளவர்களுக்கு எதிராக பேசப்படும் கருத்துகளை நான் ஆதரிக்க மாட்டேன். இது நல்ல அறிகுறியும் அல்ல. ஏனெனில் இது குழு சார்ந்த விளையாட்டு. இத்தகைய வலுவான வீரர்களை கொண்டு தேசத்திற்காக திறமையை வெளிப்படுத்துவதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் அவ்வளவு தான். இவ்வாறு கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement