நான் செஞ்சுரி அடிப்பதை விட எனக்கு இதுதான் முக்கியம். இல்லனா எல்லாமே வேஸ்ட் தான் – கோலி வெளிப்படை

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ராகுல், ரிஷப் பண்ட், கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்கள் மற்றும் கோலி 66 ரன்கள் என பேட்டிங்கில் அசத்தினார்கள்.

Rahul

- Advertisement -

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன்குவிப்பை வழங்கியதால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர்களை சுருட்டை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தான் சதங்களை தவறு விடுவது பற்றி பேசிய கேப்டன் கோலி கூறுகையில் : நான் எப்பொழுதும் சதத்தை எதிர்பார்த்து விளையாடுவது கிடையாது. நான் சதம் அடிப்பதை விட அணி வெற்றி பெறுவது என்பதே எனக்கு முக்கியமான ஒன்று.

kohli 1

அப்படி நான் சதம் அடித்தும் இந்திய அணி தோற்றால் அந்த சதத்திற்கு மதிப்பில்லை. என்னை பொறுத்தவரை அணியின் வெற்றிதான் முக்கியம் என சிறப்பான பதிலை கோலி அளித்தார். கடைசியாக கோலி விளையாடியுள்ள 10 ஒருநாள் போட்டிகளில் ஆறு அரை சதத்தை அடித்து இருந்தாலும் நீண்ட ஒரு பெரிய இடைவெளியில் அவர் சதம் அடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் சதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அவரின் சதம் வராமல் வருத்தத்தில் இருந்தாலும் நாளுக்கு நாள் கோலி படைத்து வரும் சாதனைகளுக்காக அவரை பாராட்டவும் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement