இவர் ஒருவரின் ஆட்டம் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் – கேப்டன் கோலி பேட்டி

Kohli-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

indvsnz

- Advertisement -

அதன்படி 50 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், ராகுல் 88 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் கோலியும் 51 அடிக்க பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பாக ராஸ் டைலர் 84 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் லேதம் மற்றும் துவக்க வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் அரைசதம் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.

taylor 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : நியூசிலாந்து அணி அற்புதமாக ஆடி உள்ளது. 348 ரன்கள் இலக்கு என்பது போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். பந்துவீச்சிலும் துவக்கம் முதலே நன்றாக செயல்பட்டோம். அந்த அணியின் கேப்டன் டாம் லேதம், அவரின் ஆட்டம்தான் போட்டியை எங்கள் கைகளில் இருந்து மாற்றிவிட்டது.

- Advertisement -

Taylor

டெய்லர் மற்றும் லேதம் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடி போட்டியை அவர்களுக்கு சாதகமாக எடுத்து சென்றனர். பீல்டிங்கில் நன்றாக செயல்ட்டோம், ஆனால் ஒரு கேட்சை தவறவிட்ட்டுள்ளோம். இதில் சற்று இன்னும் எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இன்று எங்களைவிட நியூசிலாந்து வீரர்கள் நன்றாக ஆடினார்கள்.

அவர்களுக்கு வெற்றி உரித்தான ஒன்றாகும். இந்திய அணியின் புதிய தொடக்க வீரர்கள் இருவரும் நன்றாக ஆடினார்கள் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement