மூன்றாவது ஒருநாள் போட்டி : இந்த வெற்றிக்கு இவர்கள் இருவரே காரணம் – புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : முதல் பாதியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தோம். ஆனால் இரண்டாவது பாதியின் போது ஆட்டம் மாறியது. கில் மற்றும் இதர புதிய வீரர்கள் அணிக்குள் வரும்போது அது ஒரு புத்துணர்ச்சியை தந்தது. இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு நிறைவே ஒத்துழைத்தது என்று கூறவேண்டும். எங்களுடைய நம்பிக்கையும் இந்த போட்டியின் மூலம் அதிகரித்துள்ளது. இன்டர்நேஷனல் கிரிக்கெட்டை நீண்டகாலமாக விளையாடும்போது இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு தான் மீண்டு வர வேண்டும்.

jadeja 1

இந்த போட்டியில் நாங்கள் முழு திருப்தி அளிக்கும் விதமாக விளையாடி உள்ளோம். இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது அப்படியே தொடர விரும்புகிறோம். இந்த போட்டியில் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் சிறப்பான ஒன்றாகும். இந்திய அணிக்கு இதுபோன்ற ஒரு விடயம் நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும். ஆஸ்திரேலிய அணி போன்ற பெரிய அணிகளுக்கு எதிரே இது போன்ற ஒரு ஆட்டம் நிச்சயம் தேவை என வெற்றி குறித்து கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement