Virat Kohli : தவான் அணியில் மீண்டும் இந்த போட்டியில் இணைவார் – கோலி பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

india

- Advertisement -

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி பாகிஸ்தான் அணியுடனான போட்டியை பற்றியும் தவான் உடல்நிலை பற்றியும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும். இதில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை வெளிக்கொண்டு வருவார்கள்.

Dhawan

கடந்த பல தொடர்களை போலவே இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நிச்சயம் வெற்றிபெறும் மேலும் தவான் இரண்டு வாரத்துக்கு அணியின் கட்டுப்பாட்டுடன் உள்ளதாகவும் அரையிறுதிக்குள் முழுவதுமாக குணமடைந்து அணியில் இணைவார் என்று நினைக்கிறேன் என்றும் கோலி கூறினார்.

Advertisement