Shikhar Dhawan : தவான் இதனால் தான் அணியுடன் தொடர்ந்து இருக்கிறார் – கோலி பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

Dhawan
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

india

- Advertisement -

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் குறித்து கேள்விக்கு கோலி அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஷிகார் தவான் இடத்தில் யார் ஆடப்போகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த உலக கோப்பை தொடரில் ஷிகர் தவான் விளையாட விரும்புகிறார். மேலும் அவருடைய எண்ணம் அவருடைய காயத்தை குணப்படுத்தும் என்று நம்புகிறேன்.

Pant

இதனால் அவரது காயம் விரைவில் சரியாகி லீக் போட்டியில் இரண்டாம் பாதியில் மற்றும் அரை இறுதியில் அவர் இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவார். அதனாலேயே அவரை இந்திய அணியிலிருந்து வெளியேற்றாமல் வைத்துள்ளோம் என்று கோலி கூறினார். ஒருவேளை தவான் விளையாட முடியாத நிலை உறுதி செய்யப்பட்டால் பண்ட் அணியில் விளையாடுவார் என்று கோலி கூறினார்.

Advertisement