இந்த பந்து எப்படி சிக்சருக்கு போச்சு. அதிர்ச்சியில் உறைந்த கோலி – வைரலாகும் வீடியோ

Six
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் தொடர்ந்து அசுரவேக தாக்குதலில் அடிவாங்கி திணறிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட நான்கு வீரர்கள் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஹெல்மட்டில் அடிவாங்கினர்.

பிங்க் பந்தின் எக்ஸ்ட்ரா வேகமும், பவுன்சும் அவர்களால் கணிக்க முடியவில்லை. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர் மெஹதி ஹசன் பேட்டிங் செய்யும் பொழுது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். அந்த பந்து தன்னை தாக்காமல் இருக்க தடுக்க நினைத்தார் மெஹதி ஹசன்.

பேட்டை பாதி தூரம் தூக்கிய மெஹதி ஹசன் பேட்டின் விளிம்பில் பட்டு பந்து சிக்சருக்கு சென்றது இதனைக்கண்ட ரோகித் மற்றும் கோலி ஆகியோர் இந்த பந்து எப்படி சிக்சருக்கு சென்றது என்று வியப்படைந்தனர். மேலும் பவுண்டரி லைனில் இருந்த புஜாராவும் இவர்கள் இருவரையும் நோக்கி தனது வியப்பை வெளிப்படுத்தினார். இந்த சிக்சர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement