திருமணநாளான இன்று தனது மனைவி அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கோலி

anushka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 2013ம் ஆண்டு ஒரு விளம்பர படப்பிடிப்பின்போது சந்தித்துக் கொண்டு அதன் பிறகு தங்களது காதலை வளர்த்தனர்.

கிட்டத்தட்ட நான்கு வருடம் காதலில் இருந்த அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இத்தாலியின் நெருங்கிய உறவினர்கள் உடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு பல நாட்டிற்கு சென்று புகைப்படத்தை பதிவிடும் வழக்கம் கொண்ட இந்த ஜோடி கடந்த இரண்டு வருடமாக துளியும் அளவில் குறையாத காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்று தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்துக் வருகின்றனர். இந்நிலையில் கோலி அனுஷ்காவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் காதல் என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல அதற்கும் மேற்பட்ட ஒன்று. நீங்கள் என் வாழ்வில் இருப்பதால் நான் என்னை அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் காதல் மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை. உங்கள் வாழ்க்கை உணர்த்தும் ஒரு நபருடன் நீங்கள் இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அனுஷ்கா மீதான காதலை உணர்த்தி கோலி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement