அப்பாடா ஒருவழியாக ரோஹித் உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி – போட்டோவை பாருங்க புரியும்

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் விரிசல் ஏற்பட்டது என்ற செய்தி இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வந்தது. அதற்கேற்றார்போல் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை தவிர்த்தார்.

Rohith

- Advertisement -

அதன்பிறகு ரோகித் சர்மா இடம் பெறாமல் இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் கோலி. இதன் மூலம் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்று வலைதளங்களில் நெட்டிசன்கள் பேசிக் கொண்டனர். ஆனால் கோலியோ ரோகித் சர்மா உடனான உறவு ஆரோக்கியமாக உள்ளது என்று பேட்டி அளித்து வந்தார். அப்படி அளித்தும் இந்த பிரச்சனை குறித்த சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு கடற்கரையில் குளித்து கொண்டிருக்கின்றனர் அப்போது ரோகித் சர்மாவும் அவருடன் இருக்கிறார்.

 

View this post on Instagram

 

Stunning day at the beach with the boys ????????????????

A post shared by Virat Kohli (@virat.kohli) on

அனைவரும் தங்களது தோல் மீது கைகளை போட்டவாறு அந்த புகைப்படத்தில் உள்ளனர். இதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை அவர்கள் சுமுகமாக இருக்கிறார்கள் என்பதனை கோலி எடுத்துக் காட்டி உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இனிமையான நாள் கடற்கரையில் எனது அணி வீரர்களுடன் என்று கோலி பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement